Sunday, September 8, 2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்                

கல்வி அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா என்று 
கேட்பீர்.அறிவுடையோர்கள் நல்லறிவு பெறுகிறார்கள்.(அல் குர்ஆன் 30:09)
கல்வியை தேடும் வழியில் ஒருவர் நடந்தால் அல்லாஹ் அவர்க்கு சொர்கத்தின் பாதையை இழகுவாக்குகிரன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம் :2600)

                  முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை) மஸ்ஜிதுர் ரஹ்மத் வளாகத்தில் பெண்களுக்கான அரபி மதரசா "அர்  ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா" என்ற பெயரில் 01-06-2013 முதல் தொடங்கப்பட்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இனிதே செயல்பட்டு கொண்டு வருகிறது.

தற்பொழுது ஓராண்டு ஆலிம பட்ட வகுப்புகள் மட்டும் தொடங்கி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.ஓராண்டிற்கு மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது .





முதல் பருவ பாடங்கள்
1.லுகதுல் அரேபியா (அரபி சொற்கள்)

2.பராய்லுல் நிஷா (பெண்களுக்கான நபிவழி சட்டம் )

3.சுரப் (இலக்கணம்)

4.அக்கிதா

5.ஹதிஸ்

6.நபி வழியில் தொழுகையின் சட்டங்கள்

7.சீரா (இறைதூதர்களின் வரலாறு )

8.சூரா மனனம்

9.பயான் பயிற்சி

10.தஜ்வீது முறையில் குர்ஆன்  ஓதுதல்.


தகுதியும் திறமையும் கொண்ட ஆலிமாக்களை கொண்டு  வகுப்புகள் எடுக்கபடுகிறது .வாகன வசதி உள்ளது..